அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது ‘லொக்கு பட்டி’ பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பல வழக்குகளில் தொடர்புடைய ‘லொக்கு பட்டி’, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெலாரஸில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தது.
இன்று காலை துபாயிலிருந்து ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் லொக்கு பட்டி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அதுருகிரியவில் உள்ள ஒரு பச்சை குத்தும் கடையில் ‘கிளப் வசந்த’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான ‘லொக்கு பட்டி’, படுகொலையைத் திட்டமிட்டு நிதியளித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.







