ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு திகதியையும், நேரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் ஊடாக, கடினமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here