அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனத் தெரிவித்து ஈரானின் அயதுல்லா அலி கமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் எழுதிய கடிதம் குறித்து வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

எனினும் ஈரானிலிருந்து இவ்விடயம் தொடர்பாக எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here