Monday, April 20, 2026
No menu items!

ஈரான்

இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!

இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் (Hormuz) கடல்வழி வர்த்தகப் பாதையானது, நட்பு நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஒருபோதும் மூடப்படவில்லை என்று ஈரான் தரப்பு விளக்கியுள்ளது. இதன்...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

இஸ்ரேலியப் படைகள் பள்ளி மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருந்தபோதும், முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தினமும் தொடர்ந்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படுகொலையில் ஈரானிய அணு விஞ்ஞானியுடன் 11 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்!

ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகுதியில் அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு சற்று முன்பு, இஸ்ரேலிய படுகொலைத் தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி செடிகி சபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் ஆங்கில மொழி செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, கஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள வடக்கு ஈரானிய...

ஜோர்டான் பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய இராணுவப் பயிற்சி முகாம்கள்!

ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை முதல் பிற்பகல் வரை பயிற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயிற்சியின் போது அப்பகுதியில் இராணுவ வாகனங்களின் அதிக இயக்கம் இருக்கும் என்றும் செய்திகள் மேலும் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் ஈரானுடன் இஸ்ரேல் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்தப்...

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து...

போரின் விலை: உயிரிழந்த குழந்தைகள், அழிந்த குடும்பங்கள் – அமைதிக்கு இதுவே நேரமா?

இஸ்ரேல் தனது "சட்டவிரோத ஆக்கிரமிப்பை"  நிறுத்த வேண்டும்.இவ்வாறு நிகழும் பட்சத்தில், ஈரான் தனது படையெடுப்புகளை நிறுத்தும் என ஈரானின் வெளிவிவகாரத் துணை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாள் போரை” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறி, இரு நாடுகளும் தற்காலிக அமைதிக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்தவொரு...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் திங்களன்று பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், ஈரானிய தாக்குதல் குறித்து கத்தார் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஏன் முக்கியமானது:...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில், குறைந்தது 10 இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) வீரர்கள் உயிரிழந்ததாக, உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட IRGC உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதி தொடங்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதலுக்குப் பின்னர்,...

“அழிவின் அடையாளம்!” – ஈரானில் நிகழ்ந்த ‘மாபெரும் தாக்குதல்’ குறித்து ட்ரம்ப் அதிர்ச்சித் தகவல்!

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த இரவில் நடந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலில், ஈரானின் அணுஆய்வுத் தளங்கள் “மிகப்பெரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன” எனக் கூறியுள்ளார். தன் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாத சில செயற்கைக்கோள் படங்களை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார்.  “அழிப்பு என்பது சரியான வார்த்தை! அந்த வெண்மை கட்டிடம்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img