2024 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு விசேட நாட்கள் இன்று ஆரம்பமாகின்றன.
ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை ஊழியர்கள் இன்றும் நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களது பணியிடங்கள் உள்ள மாவட்டச் செயலகத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







