1

திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு  மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த  சுமார் 500 மீட்டர் தூரத்தில் திருடர்கள் பசு மாட்டை கடத்திச் சென்று பரந்தன் முல்லைவீதி அருகில்  மாட்டை இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசி சென்றுள்ளார்கள். இவ் விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here