Friday, June 19, 2026
No menu items!

பரந்தன்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கோரவிபத்து; இருவர் பலி!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பரந்தன் பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்!

பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் கசிப்பு கடத்தியவர் மக்களால் மடக்கி பிடிப்பு!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் சூட்சமான முறையில் பயண பொதியில் எடுத்துச் செல்லப்பட்ட கசிப்பு பொதி உடைந்து கசிந்ததில் பேருந்தில் பயணித்த மக்கள் துர்நாற்றம் வீசியதை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோத கசிப்பை பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் பரந்தன் பகுதியில் இருந்த வீதி...

வாகனத்தின் மீது வேருடன் சாய்ந்த மரம் – மின் இணைப்புக்கள் சேதம்..!

பரந்தன், முல்லைத்தீவு  A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற  மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்புக்களும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து  குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் வீசப்பட்டுள்ள மாட்டின் பாகங்கள்…

திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு  மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த  சுமார் 500 மீட்டர் தூரத்தில் திருடர்கள் பசு மாட்டை கடத்திச் சென்று பரந்தன் முல்லைவீதி அருகில்  மாட்டை...

சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் !

மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் பயணிகள் இறங்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்து!

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன்  பகுதியில் நேற்று இரவு வேக்க் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து பரந்தன்  நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு பின்னால்...

A9 வீதி கிளிநொச்சி இயக்கச்சி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..! 

கிளிநொச்சி இயக்கச்சி A9 வீதி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது இரவு 10.30 மணியளவில்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது . நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை...
- Advertisement -spot_img

Latest News

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணி அனுப்பும் நாடாக மாறியுள்ள குவைத்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. 2025ல்...
- Advertisement -spot_img