முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு நகரின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று திடீரென மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.

அந்த நேரத்தில் நிலையத்தின் கதவு திறந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, யானை அமைதியாக உள்ளே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சில நிமிடங்கள் அங்கு  இருந்த யானை பின்னர் மீண்டும் வெளியேறியதாகவும், யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here