Thursday, July 23, 2026
No menu items!

காட்டு யானை

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை..!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு நகரின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று திடீரென மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த நேரத்தில் நிலையத்தின் கதவு திறந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, யானை அமைதியாக உள்ளே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்கள்...

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!

மட்டக்களப்பு - மகிழவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தமது 3 வயதுக் குழந்தையுடன் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் காட்டு யானை, தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன்போது குறித்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க புதிய திட்டம்!

தொடருந்துகளுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டமொன்றை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது. சுற்றாடல் அமைச்சு, தொடருந்து திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, கல்ஓயா தொடருந்து நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொடை தொடருந்து நிலையம் வரையில் காட்டு யானைகள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாகக் கூடிய 7...

சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ‘யூனிகொர்ன்’ காட்டு யானை..!

மின்னேரியா தேசிய பூங்காவின்  ‘யூனிகொர்ன்’ என்ற பிரபலமான காட்டு யானை, சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால்  திங்கட்கிழமை (17/03/2025)...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!  

காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கஹகட்டகஸ்திகிலிய , தம்பகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு யானை தாக்கியதில் இந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுல்வெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.   <!-- -->

பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் அவதிப்படும் மக்கள்..!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். இக்காலப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் மேலோங்கி யிருப்பதால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள  பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் பெரிய பாலம் தொடக்கம்...

சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 50 யானைகள் உயிரிழப்பு..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும். எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள...

காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு..!

பொலன்னறுவை - கிரித்தலை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (09.12.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 69 வயதுடைய நபர் வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிபர் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

காட்டு யானை தாக்கியதில் வயோதிப பெண் உயிரிழப்பு..!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஹாசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிப  பெண் ஆவார். இந்த வயோதிப  பெண் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம்...

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் இன்று இரத்து!

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் அனைத்தும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன. மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன் தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img