கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், தற்போதுவரை அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here