Saturday, June 13, 2026
No menu items!

சர்வதேச ஊடகங்கள்

65 நாட்கள் தொடர்ச்சியான ‘துருவ இருள்’: ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரத்தில், இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய அஸ்தமனம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், நகரம் அடுத்த 65 நாட்கள் தொடர்ச்சியான இருளான ‘துருவ இரவு’ (Polar Night) நிலையை எதிர்கொள்ளவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் பரோ (Barrow) என அழைக்கப்பட்ட இந்த நகரம், ஆர்க்டிக்...

அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது; ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தை ஜனநாயக முறையில் கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு இருந்தாலும், அதற்கு பணியாமல் நாட்டின் பிரச்சினைகளை சுயமாக தீர்க்க வேண்டும் எனவும் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “எங்களிடம் இருந்த பிரச்சினைகள் பங்களாதேஷ், நேபாளம் போன்ற...

டொராண்டோவில் இருந்து   35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !

கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,...

தென் கொரியாவில் இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் கோசியோங் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணையொன்றில், 2 இலங்கையர்கள் உட்பட 3 தொழிலாளர்கள் நீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 50 வயதுடைய ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 20, 30 வயதுடைய 2 இலங்கைத் தொழிலாளர்களே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த நீர்த் தொட்டி 4 மீற்றர் அகலமும் 2...

“போர் முடிந்துவிட்டது” – காசா நிலை குறித்து அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும்...

இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில் கத்திகுத்து தாக்குதல்!

இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில், வாகனம் ஒன்றில் பயணித்தவர், வாகனத்தைப் பாதசாரிகள் கடவையில் செலுத்தியதுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்தியபோது அதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யூதர்களின் புனித தினமான இன்று, வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், அந்த நபரிடம் கைக்குண்டு ஒன்று இருப்பதாக...

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைநீக்கம் !

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.சி.சி வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும்...

நேபாளத்தில் தப்பிச் சென்ற 1,500 கைதிகள்!

நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, நேபாளத்தின் லலித்பூரில் பகுதியிலுள்ள நகு சிறையிலிருந்து சுமார் 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவர் ரபி லமிச்சானே விடுவிக்கப்பட்டதையடுத்து, இவ்வாறு பெருமளவானோர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது, ​​சிறைச்சாலையில் குறைந்தது 1,500 கைதிகள் இருந்துள்ளனர். காவல்துறையினர் தமது பணியிடங்களை விட்டுச்...

பதவி விலகிய நேபாள பிரதமர்!

நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம்...

மீண்டும் மீண்டும் விமான விபத்து; பலியாகும் உயிர்கள்!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img