பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துத் தருவதாகக் கூறி இந்த மோசடி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிரதி காவல்துறை அதிபர் ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட முத்திரையையும் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here