கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஆரம்பித்தனர்.

ஏதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாளையிட்டு மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கயின் ஒரு அங்கமாக வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவடி முன்மாரி மாவீர் துயிலும் இல்லத்தினை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்தனர்.

இதேவேளை மாவட்டத்தில் வாகரைகண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடிமுன்மாரி ஆகிய நான்கு மாவீரர் துயிலும் இலங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here