சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








