மின்னல் தாக்கம் குறித்து 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (15) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here