இலங்கை பொலிஸ் தலைமையகம், விசேட அறிக்கையொன்றில்,  முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக  வருடாந்த செலவினம் 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அதிகளவான பங்கு ஆண்டுக்கு 326 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது குறிப்பிட்ட குழுவினால் அவ்வப்போது பரிசீலனை செய்யப்படும்.

மேலும், மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்கள், விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்யும் வகையில், ஆயுதப்படையைச் சேர்ந்த பணியாளர்களையும் உள்ளடக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here