மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும், கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது 26ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தாமதமானதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here