இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பாக எதிர்வரும் ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதத்தை அனுப்புவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புகள் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்குபற்றினர்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுரேன் குருசாமி, பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுரேஸ் பிறேமசந்திரன், மற்றும் சிவில் அமைப்புகள் பொது அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)








