நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

(யாழ் நிருபர்- கஜிந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here