சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) விசேட கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளால் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தை சுருக்கி, போராடும் குடிமக்கள் மீது வரி விதிப்பதன் மூலம் அல்ல, பொருளாதார வளர்ச்சி மூலம் மீட்சி வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

2033 க்கு பதிலாக 2028 க்குள் IMF கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த பிரேமதாச, அத்தகைய கொடுப்பனவுகளைத் தக்கவைக்க போதுமான ஏற்றுமதி வருவாய் நாட்டில் இல்லை என்று எச்சரித்தார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதே வேளையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும், ஏற்றுமதியை அதிகரிக்க பயனுள்ள திட்டம் எதுவும் இல்லை என்றும், இது நாட்டை ஆழமான நிதிப் பொறிக்குள் இட்டுச் செல்கிறது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here