மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பயிற்சி மண்டபத்தில் சுற்றாடல் முன்னோடிப் பாசறை இன்று காலை ஆரம்பமாகியது.
இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் குறித்த முன்னோடிப்பாசறை நடைபெறவுள்ளது. ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ம. பற்றிக்டிறஞ்சன் செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு. ம. சிவகுமார் பிரதிப்பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை திரு. க.அ. சிவனருள்ராஜாவலயக் கல்விப் பணிப்பாளர் வடக்கு கல்வி வலயம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)








