வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார்.
வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








