நேற்று மதியம் மருதானை பிரதேசத்தில் 03 வயதுடைய குழந்தையொன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் தந்தை தமது வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை பின்னோக்கிச் சென்றதாகவும், வாகனத்தின் பின்னால் சென்ற குழந்தையின் மீது தவறுதலாக மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







