வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காலி மாவட்ட தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரசபையின் ஊடாக வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்வதற்குரிய, தொழில்நுட்ப
உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கு கையூட்டல் கோரியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.








