கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று (01.11.2024) பி.ப. 5 மணி முதல்  24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியசாலையின் சில வைத்தியர்களை அச்சுறுத்தியதாகக் கூறி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளருடன் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.

ஆனால் குறித்த வைத்தியர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் அனைத்து விசேட வைத்தியர்களும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனைத்து வைத்தியர்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமையினால் கிளினிக் சிகிச்சைகள் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here