ஹங்வெல்ல – நெலுவன்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30.09.2024) இரவு 8.15 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 55 வயதுடைய நபரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.







