10ஆவது பொதுதேர்தலுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

அதற்கமைய நாடு முழுவதும் 2034 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இரவு 7 மணி ஆகும்போது பிரதான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

இரவு 10 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here