அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.

இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19 சதவீதமும், இந்தியா மீது 25 சதவீதமும், மியன்மார் மீது 40 சதவீத வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், தாய்வானுக்கு 20 சதவீதமும், தாய்லாந்திற்கு 19 சதவீதமும், வியட்நாமுக்கு 20 சதவீதமும் என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here