புதிய ஆசிரியர்களுக்கான நியமனம்…
தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் ஜூலை 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில வழி உயர் டிப்ளோமா பரீட்சையின்
கீர்த்தி சுரேஷ் மணப்பெண் தோழி லுக்கில் அசத்தலான ஸ்டில்கள்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார் அவர். கீர்த்தி நடித்து இருக்கும் ரிவால்வர் ரீடா படமும் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கிறது. தற்போது கீர்த்தி தோழி ஒருவரது திருமணத்தில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அழகிய புகைப்படங்கள்
அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம்
நாளை நடைமுறைக்கு வரும் பல்கலைக்கழகச் சேர்க்கை…
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 14, 2024 அன்று திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. UGC இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.ugc.ac.lk இல் உள்நுழைந்து நாளை காலை 6:00 மணிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என UGC தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி ஜூலை 5
கெளரவிக்கப்பட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி !
தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து துன்னாலைப் பிரதேசத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை இன்று வியாழக்கிழமை சிவசேனை அமைப்பினர் பாராட்டியிருந்தனர். அண்மையில் தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் இருந்து சில பசுக்களை- சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் கும்பல் கடத்திச் சென்றிருந்தது. இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார்
உறக்கத்தில் பேசுபவரா நீங்கள்..?
உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு சிலர் முணுமுணுக்கத் தொடங்குவார்கள். அல்லது சிரிப்பார்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று எழும்பி நடக்கவும் ஆரம்பிப்பார்கள். இதற்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது அல்லது காத்து கருப்பு அண்டியிருக்கிறது என நினைப்போம். உண்மையில் அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். யார் உறக்கத்தில் பேசுவார்கள்? பெரும்பாலும் 3 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உறக்கத்தில்
இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்…
இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக செயற்படுகின்றன. இந்த வருடம்
செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்கிய சஜித்!
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ். கைதடி- நபீல்ட் – செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு இன்று காலையில் விஜயம் மேற்கொண்டார். இதன்போது பாடசாலைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை அன்பளிப்பாக வழங்கினார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முகம் கழுவாவிட்டால் என்ன நடக்கும்..!
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, முதல் வேலையாக முகத்தை கழுவுகிறோம். இவ்வாறு செய்ய என்ன காரணம் என்றால், இரவு முழுவதும் உறங்கியதன் காரணமாக நமது முகம் மிகவும் சோர்வாகவும் உறக்க கலக்கமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி முகத்தை சுத்தப்படுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணம், முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு,எண்ணெ்ய்த் தன்மை போன்றவற்றை நீக்குவதற்காகும். மேலும் நாள் முழுவதும் வெளியில் அலைந்து திரிவதால் நமது
குவைத் தீ விபத்தில் ஐந்து உயிரிழப்பு!!!
குவைத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி ஐந்து தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்துள்ளன. எனினும், உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு குவைத்தில் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்