Wednesday, June 18, 2025

36,385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

Must Read

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக  நேற்றைய தினம்(09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது தொடர்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகள் இந்த வாரத்தில் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு கிடைத்ததும் உடனடியாகவே அந்த நியமனங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அமைச்சரவை தீர்மானத்தின்படி பதவியை இராஜினாமா செய்தமை, விடுமுறையில் சென்றுள்ளமை மற்றும் ஓய்வு பெற்றுள்ளமை காரணமாக மாகாண மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாகாணங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேல் மாகாணத்திற்கு 5000 பட்டதாரி ஆசிரியர்களும் தென் மாகாணத்திற்கு 1028, மத்திய மாகாணத்திற்கு 1067, வடமத்திய மாகாணத்திற்கு 1408, வடமேல் மாகாணத்திற்கு 665, ஊவா மாகாணத்திற்கு 590, சப்ரகமுவ மாகாணத்திற்கு 877 என மொத்தமாக 10,635 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அது தொடர்பில் அறிவிப்பு செய்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்தப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு முற்படுகையில் நீதிமன்றத்தில் அதற்கு எதிராக  மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால்  இரண்டு வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக விஞ்ஞானம், கணிதம்,  சர்வதேச மொழி, தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக 5450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது அவற்றில் 1700 பட்டதாரிகள் தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முக பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img