காலி – நாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோகிராம் ஐஸ் மற்றும் 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, இரத்மலானை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போதைப் பொருள் காலி – கந்தர பகுதிக்குக் கடல் மார்க்கமாகக் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here