பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது நேற்றைய தினம்(25.08) இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதுடைய ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here