மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த வர்த்தமானி வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








