இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.








