பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து குறித்த பிக்குமாரிடம் குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை ரூபாவில் 1.1 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட இந்தப் போதைப்பொருள் பறிமுதல், விமான நிலையத்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய தொகையாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உளவுத் தகவல் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையின் போது குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு நிதியளித்தவர்கள், மற்றும் இந்தக் கடத்தல் வலையமைப்பில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தார்களா என்பது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.








