நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 25 மற்றும் 39 வயதுடைய 2 சிறை அதிகாரிகள் ஜூலை 13 மற்றும் ஜூலை 14 அதிகாலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 21 கைதிகள் ஏற்கனவே உயிரிழந்தனர். இதனுடன் மொத்த உயிரிழப்பு 31 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பல சிறை அதிகாரிகளும் கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.








