அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் என  அறிவுறுத்தியுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில வாரத்திற்குப் பிறகு நிவாரணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல்படுத்தப்படும் என்றும், நிவாரணம் பெறத் தகுதியான ஏழை மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here