இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 20ஆம் திகதி மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து ஆய்வு செய்திருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள், இரு நாடுகளையும் இணைக்கும் நில இணைப்பு, மின் கட்ட இணைப்பு மற்றும் எரிசக்திக் குழாய் போன்ற இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த இரு நாடுகளும் முன்முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் எந்த ஆட்சி மாறினாலும், இதுபோன்ற திட்டங்கள் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் தனது விஜயத்தின் போது, ​​வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, மாலைத்தீவு, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளின் தலைவர்களின் திட்டமிட்ட பயணமும் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here