Friday, April 17, 2026
No menu items!

இந்தியப் பிரதமர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவின் புது தில்லியை சென்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான முதல் உயர்மட்ட சந்திப்பை தொடங்கினார். ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கியிருப்பார்....

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டொனல்ட் ட்ரம்ப்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் (truth social ) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும், இந்திய பிரதமராக மோடி சிறப்பாக...

இந்தியப் பிரதமருக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் எலான் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா செயற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதேநேரம்,...

பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ள அரசாங்கம்; குற்றம் சுமத்திய ஹர்ஷ டி சில்வா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (ஏப்ரல் 15) அந்த இடத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது, ​​தற்போதைய அரசாங்கம் இந்த...

மீண்டும் வலுவடைந்துள்ள இலங்கை – இந்திய உறவு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நம்பிக்கை, உடன்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாதுள்ள பல விடயங்களுக்கான தீர்வுகளைக் காணுதல் போன்ற விடயங்கள், புதிதாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து,...

புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மோடி..!

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இது தொடர்பில் தனது எக்ஸ்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர், “அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பிரார்த்தனை செய்தேன். பௌத்த மதத்தின் மிகவும்...

அநுராதபுரத்திற்கு விஜயமானார் இந்தியப் பிரதமர்..!

மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில்...

இந்தியப் பிரதமருக்கு ‘இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கிய ஜனாதிபதி..!

இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். இருவருக்கும் இடையே இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமருக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.

இந்தியப் பிரதமரால் சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் திறந்து வைப்பு!

சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தியப் பிரதமர்..!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு' என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்த இந்தியப் பிரதமர்,...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img