அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் சட்டம் தொடர்பில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின் தலைவர்களை கொழும்புக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here