Monday, April 20, 2026
No menu items!

ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தகவல் கிடைத்தவுடன், உள்ளூராட்சி நிறுவனங்களின்படி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில்...

தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது – வெளியான அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நேற்றைய...

இலட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். 2024 அக்டோபர் 01 மற்றும் 2025 பிப்ரவரி 01 ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களுடன் கூடுதலாக...

மீள பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகை!

இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபாய் மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன்படி, அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 118 மில்லியன் ரூபாயை மீளப்...

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள 25 தரப்பினர் !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை 25 தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதில் 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சை குழுக்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுஜன ஐக்கிய முன்னனி நேற்று கொழும்பு மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. அதற்கமைய, குறித்த மாவட்டத்தில் 5 நகரசபைகளுக்கும்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளல் ஆரம்பம்..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03/03/2025) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 8, 9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி – இவ்வார இறுதியில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில்...

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்..!

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அந்தந்த மாகாணங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும். பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,040 வேட்பாளர்கள் குறித்து பொலிஸாரிடம் தேர்தல் ஆணைக்குழு முறைப்பாடு அளித்துள்ளது. அவர்களில் 900க்கும்...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்..!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img