தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளிவந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ஊடகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த படங்கள் பின்னர் பல ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அவர்களது கைத்தொலைபேசியுடன் விசாரணைக்காக பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.








