ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட மெகொட பொடி சவ்வாவின் போதைப்பொருளை, வெண்மையாக்கி கிரிம் டப்பாவில் மறைத்து வைத்திருந்த பெண்னை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீண்டகாலமாக பொலிஸாரிடமிருந்து இருந்து தலைமறைவாக இருந்த ஹோமாகம, ஹபரகடவைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் 1,300 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவான் வணிகசேகர அல்லது மெகொட பொடி சவ்வாவின் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவர் என்றும், அவர் லலித் கன்னங்கர மற்றும் பொடி திலின மற்றும் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி திலின ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here