தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை தடைப்பட்டிருந்ததுடன், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here