மாணவர்களின் கல்வி மற்றும் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (17.10) பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கும் தீர்க்கப்படாத சவால்கள் பலவற்றை இக்கூட்டம் எடுத்துக்காட்டியது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் உட்பட பல்வேறு மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.







