Tuesday, April 28, 2026
No menu items!

மாணவர்கள்

மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு..!!

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 15 000 உதவித்தொகை வழங்கவும் மேலதிகமாக...

அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக...

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் தடை – அரசாங்கம் திட்டம்!

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையும் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் முடிவெடுக்க இருப்பதாக கூறினார். அவர் மேலும், இந்நடவடிக்கை குழந்தைகளை...

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (ஆகஸ்ட் 07) வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி பெறுபேறுகளை இணையத்தளங்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலமாக பார்வையிடலாம். இந்த பெறுபேறுகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ராகிங் சம்பவம்: 22 மாணவர்கள் இடைநீக்கம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்களின் ஒரு குழுவை மனிதாபிமானமற்ற முறையில் ராகிங் நடைமுறைகளுக்கு உட்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டது. தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர்...

வேன்-மோட்டார்சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் ஒருவர் பலி!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10.00மணியளவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பிரபல...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதன்படி இந்த சம்பவம் தொடர்பில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை – நான்கு மாணவர்கள் கைது..!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில்,...

ஹொரணையில் ஏற்பட்ட விபத்து; 15 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஹொரணை-இரத்னபுர சாலையில் இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் கனரகவாகனமும்(சிறிய லொரி) நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் லொரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான...

காத்தான்குடி மத்திய கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பம்!

காத்தான்குடி மத்திய கல்லூரியின் முதலாவது பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தமிழ் இலக்கிய முதலாம் பகுதி பாட வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட நேரம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புள்ளடியிடும் விடைத்தாள்கள் மீளப்பெறப்பட்டதாக சில மாணவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். மாணவர்களும் பெற்றோர்களும் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img