புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றைய தினம் (18) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள்.
இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளின் பொறுப்புக்களைத் தாம் வகிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 23 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், அந்த அமைச்சுகளுக்காக 25 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








