கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏலவே, நேற்று முன்தினமும் நேற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








