Tuesday, April 28, 2026
No menu items!

கிழக்கு மாகாணம்

அம்பாறை ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை தீவிரம்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26.03.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சருடன், அமைச்சின் செயலாளரும் உடனிருந்தார். துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்தகளை...

கிழக்கு மாகாணத்திலும் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை-கிழக்கு மாகாண ஆளுநர்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கும்...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை..!

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி தந்த பின்னர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார். மட்டக்களப்பு பழைய...

நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே? –  சஜித் கேள்வி..!

நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாது போயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவுக்கு திறைசேரி 5 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்த போதிலும் நெல்...

புதிய பிரதம செயலாளர்கள் நியமிப்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுகான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

இன்றைய நாளுக்கான வானிலை..!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இந்த முறைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில்...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏலவே, நேற்று முன்தினமும் நேற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்..!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும்...

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டி!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட முஸ்லிம் கலாச்சார போட்டியானது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் Mrs. S .குலேந்திர குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் ஏனைய மாவட்ட  வலயக்கல்வி பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் இந்...

பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை ..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் பல...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img