ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் உரம் தரமானது என விவசாய அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உரத்தின் நிறம் தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த உரத்தின் தரம் தொடர்பில் ஆராய்ந்த விவசாய அமைச்சின் மண் தொடர்பான விசேட நிபுணர் ரேணுகா சில்வா, அந்த உரம் தரமானது என உறுதிப்படுத்தியுள்ளார்.








